கவண் @ மலைபடுகடாம் பிறந்த நிலையில் இருந்து மாறி,முற்றிய நிலையில் இருக்கும் புனத்தைக் காவல் காக்கக் குறவர்கள் சூழ்வார்கள். அவர்கள் உயர்வான ‘இதணம்’ என்னும் பரண் மேல் ஏறிக்,கையைக் கொட்டி,அகன்ற மலையில் இருக்கும் ‘இறும்பு’ என்னும் சிறு காட்டில்,பகல் பொழுதில் விளைந்ததைத் திண்ண நெருங்கி வரும் யானையைத் தவிர்க்க கவணால் கடுமையான கற்களை உமிழ்வார்கள்.இதற்குப் பயந்து கருமையான விரல்கள் உடைய கருங்குரங்குகளும் தன் குட்டிகளுடன்,பெரிய மூங்கிலின் ஈரமான கோலைத் தத்திக் கொண்டு,’கல்’ என்னும் ஓசையுடன் ஓடும்.உயிர்களை அழிக்கும்…