கவண் @ மலைபடுகடாம் |Hand catapult @ Malaipadukadaam

கவண் @ மலைபடுகடாம் பிறந்த நிலையில் இருந்து மாறி,முற்றிய நிலையில் இருக்கும் புனத்தைக் காவல் காக்கக் குறவர்கள் சூழ்வார்கள். அவர்கள் உயர்வான ‘இதணம்’ என்னும் பரண் மேல் ஏறிக்,கையைக் கொட்டி,அகன்ற மலையில் இருக்கும் ‘இறும்பு’ என்னும் சிறு காட்டில்,பகல் பொழுதில் விளைந்ததைத் திண்ண நெருங்கி வரும் யானையைத் தவிர்க்க கவணால் கடுமையான கற்களை உமிழ்வார்கள்.இதற்குப் பயந்து கருமையான விரல்கள் உடைய கருங்குரங்குகளும் தன் குட்டிகளுடன்,பெரிய மூங்கிலின் ஈரமான கோலைத் தத்திக் கொண்டு,’கல்’ என்னும் ஓசையுடன் ஓடும்.உயிர்களை அழிக்கும்…

தோரை,ஐயவி @ மலைபடுகடாம் |Thorai rice, white mustard @ Malaipadukadaam

தோரை,ஐயவி @ மலைபடுகடாம் புயல் மழை பெய்ததால்,’புனிறு’ என்னும் பிறந்த நிலை நீங்கிய, பூக்கள் மிகுந்த காட்டில்,அவலாக இடிக்கும் பதத்தில் இருக்கும் அழகிய குலை உடைய ‘தோரை’ என்னும் மூங்கில்நெல். தோட்டத்தை உழுவாமல்,கிளறி விதைக்கப்பட்ட ‘ஐயவி’ என்னும் வெண்சிறு கடுகு நெருங்கி விளைந்திருக்கும். வெண்மையான தாள்கள் இருக்கும் ‘செறு’ என்னும் சிறு வயலில்,மையின் கருமை நிறம் கொண்ட,நறுமணம் மிகுந்த விரிந்த மலர்களுடன் வளர்ந்திருக்கும் நீண்ட நெய்தல் செடிகள். “புயற் புனிறு போகிய பூ மலி புறவின்  அவற்…